செய்திச்சோலை
நாட்டு நடப்பு
தொழில்/ அறிவியல்
பக்கம்
பூங்கா
களம்
தொலைநோக்கு
சமீபத்திய கட்டுரைகள்
வாழும் காலம் கொஞ்சமே! புல்லானாலும் புத்தகம்! தமிழர் பண்பாடு! – சட்டக் கல்லூரி மாணவர்களின் கருத்து மூட்டைகள். படியுங்கள்!...
வாழ்க்கையில் தம் குறிக்கோளை அடைந்து சாதனைகள் படைத்து வெற்றி காண விரும்புவோர், தம் முயற்சிக்கேற்ற காலத்தை அறிந்து அதனை சிறிதும் வீணாக்காது பயன்படுத்துதல் வேண்டும். சரி இதுவரை எப்படியோ இனிமேல் சரியாக பயன்படுத்துவோம்.அப்புறம் என்ன இனிமே நம்ம வாழ்க்கையும் சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம் ஆகாயம் பூக்கள் தூவும் காலம் தான்
ஸ்டாலின், விஜய், எடப்பாடி, சீமான், திருமாவுக்கு ஒரு கேள்வி, சீமான் கைதாவாரா? உலகில் அதிக கடன் பெற்றுள்ள அமெரிக்காவின்...
ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் நீங்கள் வெங்காயம் வீசினால் நான் வெடிகுண்டு பேசுவேன் என்று சீமான் பேசியுள்ளார். விழுப்புரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பொது மேடையில் தடை செய்யப்பட்ட “கள்” குடித்துள்ளார் சீமான்.
குப்பைதொட்டிகாட்டியவாழ்க்கை, தேடல் சரியானதாக இல்லையா?
"அந்த கதைய கேளுங்க நான் அரிசி, பருப்பு, காய்கறின்னு எல்லாமே வாங்கி வச்சுருந்தேன்.. இட்லிமாவு வேர அரைச்சு வச்சுருந்தேன். அதனால எனக்கு ஒன்னும் கஷ்டமில்ல, மழைக்கு முன்னாடி தக்காளி கிலோ அஞ்சு ரூபான்னு சிரிப்பா சிரிச்சுது அந்த நேரம் பார்த்து ரெண்டு கிலோ வாங்கி வச்சேன். அது சமயத்துல உதவிச்சு. பக்கத்து வீட்டு காரவங்களுக்கு எல்லாம் நான்தான் அரிசி, காய்கறியெல்லாம் கொடுத்தேன். பாவம் புள்ளக்குட்டிகாரங்க நம்மளால முடிஞ்சது அதுதான். நான் தூங்குறேன் நீயும் தூங்கு” என்று சொல்லிவிட்டு தூங்கிபோனது.
மரம்வளர்ப்பில் தமிழகத்துக்கு வழிகாட்டும் ஒட்டன்சத்திரம் தொகுதி – 20 லட்சத்துக்கு மேற்பட்ட மரக்கன்றுகள் நடவு
கார்பன் பிரித்தெடுத்தல், பல்லுயிர் பாதுகாப்பு, மண் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்பு, நீர் தர மேம்பாடு, நீர் சுழற்சி ஒழுங்குமுறை, காலநிலை ஒழுங்குமுறை, காற்றின் தர மேம்பாடு, பேரிடர் அபாயக் குறைப்பு, பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார நன்மைகளுக்கு மரங்கள் அவசியம்.
ஒர் இரவுக்கு பத்தாயிரம் ரூபாய்வேண்டுமா? வதந்தி எப்படி பாதிக்கும் தெரியுமா?படிக்க, சிந்திக்க ஒரு நிமிட உண்மை கதை !
நீதிபதிக்கு டிரைவரின் நிலையும் பெரியவரின் வீம்பும் புரிந்தது. முதியவரை அழைத்து "நீங்கள் ஒரு காரியம் செய்யுங்கள் உங்கள் பக்கத்து வீட்டுக்காரனைப் பற்றி நீங்கள் சொன்ன அனைத்து விஷயங்களையும் ஒரு காகிதத்தில் எழுதி அந்த பேப்பரை துண்டு, துண்டாக கிழித்து போகிற வழியெல்லாம் ஒவ்வொரு துண்டாகப் போட்டுக் கொண்டே செல்லுங்கள் நாளை காலையில் வாருங்கள்’என்றார்.
மனித உரிமை ஆணையங்களுக்கு முழு சுதந்திரம் வேண்டும்
காவல்துறையில் உள்ள அதிகாரிகளை இடம்மாற்றி மனித உரிமை ஆணையத்தின் புலன் விசாரணை அதிகாரியாக நியமிப்பதால். மனித உரிமை மீறல்கள் சுதந்திரமாக விசாரிக்கப்படுவதில்லை என்றும், மனித உரிமைகள் ஆணையங்கள் அரசு அலுவலர்களின் மீறல்களை மட்டுமே விசாரிக்கிறது என்றும், ராணுவத்தில் நடக்கும் மனித உரிமை மீறல்களையும், தனியார் துறைகளில் நடக்கும் மனித உரிமை மீறல்களையும் விசாரிக்கும் அதிகாரம் மனித உரிமை ஆணையங்களுக்கு தரப்படவேண்டும் என்றும் மனித உரிமை ஆர்வலர்கள் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கு உரிய சட்ட திருத்தங்களை அரசு கொண்டு வர வேண்டும்.
நாமக்கல் தூசூர் ஏரி, கணக்கன்பட்டி பட்டிக்குளம் ஏரி மேம்படுத்தப்படுமா? பாதுகாக்கப்படுமா?
பழனியில் இருந்து கணக்கன்பட்டி, சத்திரப்பட்டி, விருப்பாச்சி வழியாக ஒட்டன்சத்திரம் செல்லும் சாலையில் இந்த குளம் அமைந்துள்ளது. தற்போது இந்த குளத்துக்கு சற்று வடக்கே ஒட்டன்சத்திரத்தில் இருந்து பொள்ளாச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த நிலையில் இந்தக் கிழக்கு குளத்துக்கு கிழக்கே புதிய தேசிய நெடுஞ்சாலையையும் பழைய நெடுஞ்சாலையையும் இணைக்கும் வகையில் வடக்கு தெற்காக இணைப்பு சாலை அமைக்க வேண்டும்.
திருமணம் ஆகாமல் வாழ்ந்தால் பதிவு கட்டாயம், குழந்தை பெறாமல் வாழ்வது, ஓரினச்சேர்க்கை, சுத்தியால் வரி வசூல், தகுதியற்ற வழக்கறிஞர்கள்...
தேனீக்கள் பூவிலிருந்து தேன் எடுப்பது போலவும் அரசு வருவாயை பெருக்கலாம். சுத்தியால் அடித்து பெறுவது போலவும் வருவாயை பெருக்கலாம். இந்திய வருமான வரி சட்டம், ஜிஎஸ்டி சட்டம் ஆகியன சுத்தியால் அடித்து வருமானத்தை பெருக்குவது போல உள்ளது என்று உச்சநீதிமன்ற நீதிபதி சுந்தரேஷ் அவர்கள் ஓரிரு தினங்களுக்கு முன்னர் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார்
மனிதர்கள் பலவிதம் – இரண்டு உண்மை சம்பவங்கள் உணர்த்தும் பாடம் படியுங்கள்! சிந்தியுங்கள்! வலைதளத்தில் படித்ததில் பிடித்தவை.
'இந்த வீடு அப்பாவும் அம்மாவும் கஷ்டப்பட்டு கட்டிய வீடு. மகன் என்பதற்காக எனக்கு ஒரு ரூமைக் கொடுத்தார்கள் என் மகனுக்கு வீடு அல்லது ரூம் வேண்டுமென்றால் நாம் தானே கட்டிக் கொடுக்கவேண்டும். அம்மாவை ரூமைக் காலி செய்து கொடு எனக் கேட்பது தவறு இல்லையா?'' என்று வைதேகியிடம் சொல்லிட வேண்டியது தான் என நினைத்துக் கொண்டே தூங்கி விட்டேன்.
ஆனால், மறுநாள் காலை அம்மா இதற்கொரு விடை கொடுத்தாள். ஆம், அம்மா நள்ளிரவே காலமாகி விட்டாள். ஹாலில் இருந்துகொண்டு தான் அவஸ்தைப்பட்டு அதனால் பிறத்தியாருக்கும் கஷ்டம் கொடுப்பதை விரும்பாமல் போய்ச்சேர்ந்துவிட்டாள்.
நாம் எப்படி வாழ வேண்டும்? வாத்தாகவா அல்லது கழுகாகவா? – மனதை தொட்டு சிந்தனையை தூண்டும் ஒரு நிமிட...
'சரி அவனை கூப்பிட்டு இந்த மீன் ஆனா பெண்ணா என்று கேளுங்கள். ஆண் மீன் என்று அவன் சொன்னால் பெண் மீன்தான் வேண்டும் என்றும் பெண் மீன் என்று சொன்னால் ஆண் மீன் தான் வேண்டும் என்றும் கேளுங்கள். எப்படியும் அவனிடமிருந்து பொற்காசுகளை பிடுங்கி ஆக வேண்டும்' என்றாள் மகாராணி.
மீனவன் திருப்பி அழைக்கபட்டான். கேள்விக் கணையை மகாராணி தொடுத்தாள். அவன் உஷாராக பதில் சொன்னான் 'இது ஆணுமில்லை பெண்ணுமில்லை' இரண்டின் குணங்களையும் கொண்ட அதிசய மீன். அதனால் தான் அதை மன்னருக்கு கொண்டு வந்தேன் என்றான்.